• D-18/40, First floor 7th Cross east, Thillai Nagar, Trichirappalli 620018

Senior Citizen Savings Scheme

போஸ்ட் ஆபீசில் முதியோர் சேமிப்புத் திட்டம்: இணைவது எப்படி?

கணக்கு தொடங்கும் போது டெபாசிட் செய்யும் தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை என்றால் பணமாகவே செலுத்தி கணக்கு தொடங்கலாம். அதற்கு மேல் இருந்தால் காசோலையாக (cheque) செலுத்த வேண்டும்.

தபால் நிலையங்கள் வழங்கும் ஒன்று மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம். 8.7% வட்டியுடன் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை சேமிக்கலாம்.

தபால் நிலையங்கள் வழங்கும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் ஒன்று மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme). அத்திட்டத்தில் சேமிப்புக் கணக்கு தொடங்க குறைந்தபட்ச தொகை ரூ.1,000 தேவை. அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை சேமிக்கலாம்.

கணக்கு தொடங்கும் போது டெபாசிட் செய்யும் தொகை ஒரு லட்சம் ரூபாய் வரை என்றால் பணமாகவே செலுத்தி கணக்கு தொடங்கலாம். அதற்கு மேல் இருந்தால் காசோலையாக (cheque) செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.7% வட்டி கிடைக்கும்.

இத்திட்டத்தில் சேர விரும்புகிறவருக்கு வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். 55 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் இருப்பவர்கள் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாலோ அல்லது வேறு காரணங்களால் ஓய்வு பெற்றிருந்தாலோ இத்திட்டத்தில் சேர சிறப்பு அனுமதி கிடைக்கும்.

இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். இந்தக் காலம் முடிந்து ஓராண்டுக்குள், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். இல்லையெனில் எந்த கழிவும் இன்றி கணக்கு முடித்துக்கொள்ளப்படும்.

தேவைப்பட்டால் ஓராண்டுக்குப் பின் கணக்கை முடித்துக்கொள்ளலாம். ஆனால் டெபாசிட் தொகையில் 1.5% கழித்துக்கொள்ளப்படும். 2 ஆண்டு ஆண்டுகளுக்குப் பின் கணக்கை முடித்துக்கொண்டால் 1% கழித்துக்கொள்ளப்படும்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80சி (Section 80C) மூலம் வரிச்சலுகையும் கிடைக்கும். வட்டியாகக் கிடைக்கும் பணம் 10,000 ரூபாய்க்கு அதிகமாக இருந்தால், வருமான வரி பிடித்தம் (TDS) செய்யப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் மற்றொருவரை மரபுரிமையராக (nominee) இணைக்கலாம். கணக்கு தொடங்கும்போதோ தொடங்கிய பின்னரோ இதனைச் செய்ய முடியும். ஒரு வாடிக்கையாளரே ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குள்ளை கையாள முடியும். ஒரு தபால் நிலையத்தில் தொடங்கிய கணக்கை மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்.