• D-18/40, First floor 7th Cross east, Thillai Nagar, Trichirappalli 620018

National Savings Certification

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தின் சிறப்பு அம்சங்கள், வட்டி உள்ளிட்ட தகவல்கள்.

• தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்
• வட்டி விகிதம் மற்றும் சிறப்பு அம்சங்கள்

எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன் பாதுகாப்பு, நல்ல வருமானம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டும். தபால் அலுவலகத்தில் பல்வேறு முதலீட்டு திட்டங்கள் வழங்கப்படுகின்றன. அதில், தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Saving Certificate) திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியே இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த அளவுக்கு இத்திட்டத்தில் என்ன சிறப்பு? வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு கிடைக்கும் வட்டியை விட தேசிய சேமிப்பு சான்றிதழுக்கான வட்டி அதிகம். தற்போது தேசிய சேமிப்பு சான்றிதழுக்கு 6.8% வட்டி கிடைக்கிறது.

இத்திட்டத்துக்கான மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். அதன்பின் தேவைப்பட்டால் கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீடுக்கு வரம்புகள் இல்லை.

இதுமட்டுமல்லாமல், இத்திட்டத்தில் முதலீடு செய்வோருக்கு ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கிறது. தேசிய சேமிப்பு சான்றிதழில் 5 ஆண்டுகளுக்கு மொத்தமாக 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.

ஆண்டுக்கு 6.8% என கணக்கிட்டால், 5 ஆண்டுகள் மெச்சூரிட்டிக்கு பின் சுமார் 20.85 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதாவது, ஐந்து ஆண்டுகளில் வட்டி வருமானம் மூலம் சுமார் 6 லட்சம் ரூபாய் கிடைக்கிறது.